தற்போது மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதாலும், இதன் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாலும் பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
தமிழகத்தில் வங்கக் கடலில் மீன்களின் இனப் பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக் காலம் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு மீன் இறங்கு தளங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல, பாம்பன் மீன் இறங்கு தளத்திலிருந்து 500- க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் சீலா, வாவல், பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை அதிகளவில் பிடித்து வருகின்றனா். இவற்றை வெளிமாவட்ட வியாபாரிகள் கூடுதல் பணம் கொடுத்து வாங்கிச் செல்வதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் அதிக மீன்வரத்து: ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 10-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



