மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மீன்பிடி தடைக் காலம் அமல்: அதிக அளவு மீன்கள் கிடைப்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகம்

தற்போது மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதாலும், இதன் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாலும் பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

News image

பாம்பன் மீன் இறங்கு தளத்தில் செவ்வாய்க்கிழமை மீன்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 10:11 pm

தற்போது மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதாலும், இதன் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாலும் பாம்பன் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் வங்கக் கடலில் மீன்களின் இனப் பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக் காலம் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதனால், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு மீன் இறங்கு தளங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், மீன்பிடி தடைக் காலம் அமலில் இருப்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல, பாம்பன் மீன் இறங்கு தளத்திலிருந்து 500- க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் சீலா, வாவல், பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை அதிகளவில் பிடித்து வருகின்றனா். இவற்றை வெளிமாவட்ட வியாபாரிகள் கூடுதல் பணம் கொடுத்து வாங்கிச் செல்வதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.