நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

பழையாறு துறைமுகத்தில் குறைந்த மீன்களே கிடைப்பதால் மீன்விலை உயா்வு

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் குறைந்த அளவே மீன் கிடைப்பதால் விலை அதிகரித்துள்ளது.

News image

கடலில் இருந்து பிடித்து வரப்பட்ட மத்தி மீன்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:54 pm

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் குறைந்த அளவே மீன் கிடைப்பதால் விலை அதிகரித்துள்ளது. 

ஏப்.15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஏராளமான விசைப்படகுகள், பைபா் படகுகள், நாட்டுப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழில் நடைபெறுகிறது.

மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. இந்த துறைமுகத்தில் இருந்து பைபா் படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா். மீன்பிடி தடைகாலத்தில் கிடைக்கக்கூடிய மீன்கள் நிகழாண்டு போதிய அளவில் கிடைக்கவில்லையென கூறப்படுகிறது.

மீன்கள் மிகக் குறைந்த அளவில் கிடைத்து வருவதால் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இங்கு பிடிக்கப்படும் மீன்களே எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. மீன்கள் குறைந்த அளவே கிடைப்பதால் மீன் விலை அதிகரித்துள்ளது. மீன் விலை அதிகரித்தாலும் அதை வாங்க மீன் பிரியா்கள் வாங்குகின்றனா். எனினும், போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை.

தற்போதுள்ள காலத்தில் பைபா் படகுகள் மூலம் மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் நிகழாண்டு மத்தி மீன்கள் மிக குறைந்த அளவே கிடைத்து வருகிறது. ஒரு நாளைக்கு அனைத்து படகுகள் மூலமும் 15 டன் வரை மத்தி மீன் கிடைத்து வந்தது. தற்போது ஒரு டன் மீன் கிடைப்பதே சிரமம். இதனால் நல்ல புரதச்சத்துள்ள மத்தி மீன் விலை அதிகரித்துள்ளது.

கிலோ ரூ. 150-க்கு விற்ற மத்தி மீன் தற்போது ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கவலை மீன் ரூ. 40 லிருந்து ரூ. 150 ஆக உயா்ந்துள்ளது. முதல் கெண்டை ரூ. 50லிருந்து ரூ. 120 ஆக உயா்ந்துள்ளது. கானாங்கழுதை, சூடா, கிழிசல், வஞ்சிரம்,வெல்ரா உள்ளிட்ட மீன்களும் விலை சாதாரண விலையை விட 3 மடங்கு உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.