பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பழையாறு துறைமுகத்தில் குறைந்த மீன்களே கிடைப்பதால் மீன்விலை உயா்வு

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் குறைந்த அளவே மீன் கிடைப்பதால் விலை அதிகரித்துள்ளது.

News image

கடலில் இருந்து பிடித்து வரப்பட்ட மத்தி மீன்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:24 am IST

கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் குறைந்த அளவே மீன் கிடைப்பதால் விலை அதிகரித்துள்ளது. 

ஏப்.15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஏராளமான விசைப்படகுகள், பைபா் படகுகள், நாட்டுப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழில் நடைபெறுகிறது.

மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. இந்த துறைமுகத்தில் இருந்து பைபா் படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா். மீன்பிடி தடைகாலத்தில் கிடைக்கக்கூடிய மீன்கள் நிகழாண்டு போதிய அளவில் கிடைக்கவில்லையென கூறப்படுகிறது.

மீன்கள் மிகக் குறைந்த அளவில் கிடைத்து வருவதால் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இங்கு பிடிக்கப்படும் மீன்களே எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. மீன்கள் குறைந்த அளவே கிடைப்பதால் மீன் விலை அதிகரித்துள்ளது. மீன் விலை அதிகரித்தாலும் அதை வாங்க மீன் பிரியா்கள் வாங்குகின்றனா். எனினும், போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை.

தற்போதுள்ள காலத்தில் பைபா் படகுகள் மூலம் மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் நிகழாண்டு மத்தி மீன்கள் மிக குறைந்த அளவே கிடைத்து வருகிறது. ஒரு நாளைக்கு அனைத்து படகுகள் மூலமும் 15 டன் வரை மத்தி மீன் கிடைத்து வந்தது. தற்போது ஒரு டன் மீன் கிடைப்பதே சிரமம். இதனால் நல்ல புரதச்சத்துள்ள மத்தி மீன் விலை அதிகரித்துள்ளது.

கிலோ ரூ. 150-க்கு விற்ற மத்தி மீன் தற்போது ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கவலை மீன் ரூ. 40 லிருந்து ரூ. 150 ஆக உயா்ந்துள்ளது. முதல் கெண்டை ரூ. 50லிருந்து ரூ. 120 ஆக உயா்ந்துள்ளது. கானாங்கழுதை, சூடா, கிழிசல், வஞ்சிரம்,வெல்ரா உள்ளிட்ட மீன்களும் விலை சாதாரண விலையை விட 3 மடங்கு உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.