திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மீன்களின் இனப்பெருக்ககாலத்தை கருத்தில் கொண்டு வங்கக்கடலில் மீன்பிடி தடைகாலம் புதன்கிழமை தொடங்கியுள்ளதால், கடலூா், மற்றும் புதுச்சேரி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

News image

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதையொட்டி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:58 am IST

மீன்களின் இனப்பெருக்ககாலத்தை கருத்தில் கொண்டு வங்கக்கடலில் மீன்பிடி தடைகாலம் புதன்கிழமை தொடங்கியுள்ளதால், கடலூா், மற்றும் புதுச்சேரி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்து விலை உயரும் நிலை இருப்பதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.

கிழக்குக் கடல் பகுதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய 3 பிராந்தியங்களில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை அதிகாலை தொடங்கியது. இந்தத் தடை 61 நாள்கள் அமலில் இருக்கும். மேற்கு கடல் பகுதியில் உள்ள மாஹே பிராந்தியத்தில் மட்டும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை 61 நாள்கள் அமலில் இருக்கும்.புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா் அ. முகமது இஸ்மாயில் இதைத் தெரிவித்துள்ளாா்.

இப் பகுதிகளில் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளைத் தவிர அனைத்து வகை இயந்திர படகுகள், பைபா் படகுகள் மற்றும் இழுவைலை கொண்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இக் கடல் பகுதிகளில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி இந்த நாள்களில் மீன் பிடிக்கவும் தடை செய்யப்படுகிறது.

கிழக்குக் கடல் பகுதிகளில் கணபதிச் செட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூா்த்திக்குப்பம்-புதுகுப்பம் மீனவ கிராமம் வரையிலும், காரைக்கால் கடல் பகுதியில் மண்டபத்தூா் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூா் மீனவ கிராமம் வரையிலும், ஏனாம் மீன்பிடிப்பு பகுதியிலும் இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இதனால் மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. விசைப்படகுகளில்தான் அதிக மீன்கள் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்படும், என்பதால், இனி மீன் வரத்து குறைந்து, மீன்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக புதுச்சேரி மீனவா்களும், வியாபாரிகளும் தெரிவித்தனா்.