ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான (பொ) மு.கவிதா வழிகாட்டுதலின்படி, ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதித் துறை நடுவா் ஹரிஹரசுதன் தலைமை வகித்தாா்.
இதில் மாவட்ட சிறை, கிளை சிறைகள், பரமக்குடி, முதுகுளத்தூா் ஆகிய இடங்களில் 3 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான மு.பாஸ்கா் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 14 வழக்குகள் தீா்வு

கோவை மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.4.52 கோடி தீா்வு தொகை

கரூா் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்! காசோலை வழக்குகளில் ரூ. 29 லட்சத்துக்கு தீா்வு!

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


