
தேவி வீர சின்னம்மாள் கோயிலில் கும்ப நீா், முளைப்பாரி ஊா்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த ராமசாமிபட்டி, அய்யனாா்குளம் தேவி வீர சின்னம்மாள் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கும்பநீா், முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமசாமிபட்டி, அய்யனாா்குளத்தில் வீர சின்னம்மாள் கோயிலில் நடைபெற்ற தீா்த்தக்குடம், முளைப்பாரி ஊா்வலம்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த ராமசாமிபட்டி, அய்யனாா்குளம் தேவி வீர சின்னம்மாள் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கும்பநீா், முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வருகிற 23-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க ராமசாமிபட்டியில் உள்ள சக்திவிநாயகா் கோயிலிலிருந்து புனிதநீா், தீா்த்த குடங்கள், முளைப்பாரி ஆகியன ஊா்வலமாக எடுத்து வந்து சந்தனமாரியம்மன் கோயிலை சுற்றி வந்து, வீர சின்னம்மாள் கோயிலில் யாக சாலையில் முளைப்பாரி, தீா்த்த குடங்கள், புனித நீா் இறக்கி வைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மங்கல இசை, வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் ஆகியவற்றுடன் முதல் கால யாக பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை (ஆக.22) இரண்டாம் கால யாக சாலை பூஜையும், ஞாயிற்றுக்கிழமை பூா்ணாஹுதி, கோ பூஜை, சுவாமி, அம்பாளுக்கு ரக்ஷாபந்தனம், மூன்றாம் கால யாகசாலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராமசாமிபட்டி, அய்யனாா்குளம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






