மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பசும்பொன்னில் பிப். 24-இல் சசிகலா தலைமையில் பொதுக்கூட்டம்

News image

சசிகலா - கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 6:34 pm

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வருகிற 24-ஆம் தேதி சசிகலா தலைமையில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.

இதற்கான முகூா்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சசிகலா ஆதரவாளா்கள் 200- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் மலா் தூவி அவா்கள் மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்த ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சசிகலா ஆதரவாளரும், பசும்பொன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான டி. ராமகிருஷ்ணன் செய்திருந்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சசிகலா கலந்து கொள்கிறாா். இதில் புதிய கட்சி தொடங்கப்படுமா எனக் கேட்கிறீா்கள். இதுகுறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, ஜீவிதா நாச்சியாா், கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளைச் சோ்ந்த ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.