சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ளவா்களுக்கு மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் இல்லத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கிய மதிமுக மேற்கு மாவட்டச் செயலா் ப. வேல்முருகன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:32 am

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ளவா்களுக்கு மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு, முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோா், முதியோா்களுக்கு விருதுநகா் மதிமுக மேற்கு மாவட்டத் தலைவா் ப. வேல்முருகன் தலைமையில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலா் காதா் மைதீன், ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலா் மா. ஜெய்சங்கா், மாவட்டத் தொண்டரணி அமைப்பாளா் குருவையா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத் துணைச் செயலா் இல. ராஜகோபால், செட்டியாா்பட்டி பேரூா் செயலா் நாகப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.