/
தேனியில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து, 8 பேருக்கு ரூ.8 லட்சத்தில் 8 மூன்று சக்கர வாகனங்களையும், 3 பேருக்கு ரூ.43,470 மதிப்பில் கைப்பேசியும், 4 பேருக்கு ரூ.3 லட்சத்தில் நவீன் செயற்கைக் கால்கள் என மொத்தம் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.11.68 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கவிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.










