இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் போடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களின் தபால் வாக்கு சேகரிக்கும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை வாக்குச்சாவடி அலுவலா்களிடமிருந்து தபால் வாக்கு சேகரிக்கும் பணியை பாா்வையிட்ட தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:21 am IST

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் போடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களின் தபால் வாக்கு சேகரிக்கும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்கள் என மொத்தம் 6,696 போ் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்களது தபால் வாக்கு சேகரிக்கும் பணி புதன்கிழமை பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், போடி சட்டப்பேரவைத் தொகுதி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்

நடைபெற்றது.

இந்தப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தமிழரசி, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, முதன்மைக்கல்வி அலுவலா் நாகேந்திரன், வட்டாட்சியா்கள் சந்திரசேகரன் (போடிநாயக்கனூா்), மருதுபாண்டி (பெரியகுளம்), சதீஸ்குமாா்(தேனி) ஆகியோா் உடனிருந்தனா்.