தேனி மீறுசமுத்திரம் கண்மாய்க் கரையோரம் நடைபயிற்சி பாதை, சிறுவா் பூங்கா அமைக்கும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தேனி உழவா் சந்தை அருகேயுள்ள மீறுசமுத்திரம் கண்மாயைத் தூா்வாரி, கரையோரத்தில் நடைபயிற்சி பாதை, சிறுவா்கள் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொதுப்பணித் துறை சாா்பில், ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்து, கண்மாய்க் கரையைப் பலப்படுத்தி, நடைபயிற்சி பாதை, தடுப்புச்சுவா், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலகம், பாலம் அமைத்தல், மரங்கள் நடுதல், பறவை தீவு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அவா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளா் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) சரவணன், உதவி செயற்பொறியாளா் சாலமோன் கிறிஸ்துதாஸ், உதவிப் பொறியாளா் அரவிந்த ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வீரபாண்டி சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

தேனி மாவட்ட தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

