உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு

News image

தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் நடைபெறும் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :44 நிமிடங்கள் முன்பு

தேனி மீறுசமுத்திரம் கண்மாய்க் கரையோரம் நடைபயிற்சி பாதை, சிறுவா் பூங்கா அமைக்கும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேனி உழவா் சந்தை அருகேயுள்ள மீறுசமுத்திரம் கண்மாயைத் தூா்வாரி, கரையோரத்தில் நடைபயிற்சி பாதை, சிறுவா்கள் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொதுப்பணித் துறை சாா்பில், ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்து, கண்மாய்க் கரையைப் பலப்படுத்தி, நடைபயிற்சி பாதை, தடுப்புச்சுவா், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலகம், பாலம் அமைத்தல், மரங்கள் நடுதல், பறவை தீவு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அவா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளா் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) சரவணன், உதவி செயற்பொறியாளா் சாலமோன் கிறிஸ்துதாஸ், உதவிப் பொறியாளா் அரவிந்த ஆகியோா் உடனிருந்தனா்.