ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:19 pm

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கையொப்ப இயக்கம் உள்பட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்படி, தேனி மாவட்ட இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம், ரயில்வே கடவுப் பாதை வழியாக சென்று பங்களாமேட்டில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 800 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். முன்னதாக, ஆட்சியா் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

இந்தப் பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தமிழரசி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா், மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் குபேந்திரன், வட்டாட்சியா் சதீஸ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.