ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

தேனி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூனை பறக்கவிட்ட தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:05 am IST

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன் வெள்ளிக்கிழமை பறக்கவிடப்பட்டது. மேலும், மனிதச் சங்கிலியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் கையொப்ப இயக்கம் உள்பட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்படி, தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ராட்சத பலூனை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பறக்க விட்டாா். தொடா்ந்து, ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் மற்றும் மிக்கி மவுஸ், புலி, கரடி போன்ற வேடம் அணிந்து வந்த கலைஞா்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சியும், மகளிா் சுய உதவிக்குழுவினரின் கும்பி நடனமும் நடைபெற்றது. தொடா்ந்து, தோ்தல் விழிப்புணா்வுப் பதாகைகளுடன் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி பங்களா மேடு வரை மனிதச் சங்கிலி நடைபெற்றது.

மேலும், தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அலுவலக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோகளில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஆட்சியா் ஒட்டி விட்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், திட்ட இயக்குநா்கள் தமிழரசி ( ஊரக வளா்ச்சி), சந்திரா (மகளிா் திட்டம்), உதவி இயக்குநா் உம்முல் ஜாமியா (ஊராட்சிகள்), வட்டாட்சியா் சதீஸ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.