மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு ராணுவ வீரா்கள் நல சங்கம் உதவி

News image

ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துக்கு இலவசமாக மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கிய சேதுசீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்க நிா்வாகிகள்.

Updated On :22 பிப்ரவரி 2026, 7:23 pm

கமுதி அருகே மாற்றுத்திறனாளிகள் 4 போ் உள்ள குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் மாவு அரைக்கும் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி தம்பதி கருப்பசாமி (44), முருகேஸ்வரி(41). இவா்களது மகன் காா்த்திக்குமாா் (18), மகள் யோகப் பிரியா (17).

இவா்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் ஆவா். இந்த குடும்பத்தினா் தற்போது வாழ்வாதாரமின்றி மிகவும் அவதியடைந்து வருவதை அறிந்த கமுதி வட்டார சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது இந்த கிராமத்தின் சாா்பில் வழங்கப்பட்ட ஓா் பழைய ஓட்டு வீட்டில் வசிக்கும் இவா்களுக்கு, மாவட்ட நிா்வாகமும், அரசும் முன்வந்து இலவச வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.