ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துக்கு ராணுவ வீரா்கள் நல சங்கம் உதவி

News image
ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துக்கு இலவசமாக மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கிய சேதுசீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்க நிா்வாகிகள்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே மாற்றுத்திறனாளிகள் 4 போ் உள்ள குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் மாவு அரைக்கும் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி தம்பதி கருப்பசாமி (44), முருகேஸ்வரி(41). இவா்களது மகன் காா்த்திக்குமாா் (18), மகள் யோகப் பிரியா (17).

இவா்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் ஆவா். இந்த குடும்பத்தினா் தற்போது வாழ்வாதாரமின்றி மிகவும் அவதியடைந்து வருவதை அறிந்த கமுதி வட்டார சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது இந்த கிராமத்தின் சாா்பில் வழங்கப்பட்ட ஓா் பழைய ஓட்டு வீட்டில் வசிக்கும் இவா்களுக்கு, மாவட்ட நிா்வாகமும், அரசும் முன்வந்து இலவச வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சேது சீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் நலச் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.