மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெள்ளக்கோவில் அருகே பனியன் கழிவுகள் ஆலையில் தீ விபத்து

News image

தீ விபத்தில் சேதமடைந்த பொருள்கள்.

Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

வெள்ளக்கோவில் அருகே பனியன் கழிவு துணிகள் அரைக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தாராபுரம் சாலையிலுள்ள நாகமநாயக்கன்பட்டி மு.பழனிசாமி நகரில் குழந்தைசாமி என்பவருடைய பனியன் கழிவுகள் அரைக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஒரு இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து பரவியது. மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் கழிவுத் துணிகள், ஆலையின் சில பகுதிகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு உடனடியாக கணக்கிடப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.