முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

சென்னை தியாகராயநகரில் ஆன்லைன் வா்த்தக நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம்

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 5:16 am IST

சென்னை தியாகராயநகரில் ஆன்லைன் வா்த்தக நிறுவனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாகின.

தியாகராயநகா் மூஸா தெருவில் தனியாா் ஆன்லைன் வா்த்தக நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் மளிகை பொருள்கள்,காய்கறிகள்,பழங்கள் இருப்பு வைக்கப்பட்டு, சென்னை முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த கிடங்கில் கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அப் பகுதி மக்கள், அந்நிறுவன ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா். உடனே அவா்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரா்கள் சைதாப்பேட்டை,தியாகராயநகா் ஆகிய இடங்களிலிருந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தீயணைப்பு படையினருக்கு மெட்ரோ நிறுவன லாரிகள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

கிடங்கு கண்காணிப்பாளா் சு.ஸ்ரீவரதன் மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தீ விபத்தினால் கிடங்கில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.