படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பொருழ்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் குன்றத்தூா் பகுதியை சோ்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் பழைய பிளாஸ்டிக் பொருள்களை தரம் பிரித்து மறு சுழற்ச்சிக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கிடங்கில் ஒரு பகுதியில் மின் கசிவு காரணமாக பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
கடுமையான வெய்யில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கிடங்கில் ஒரு பகுதியில் தொடங்கிய தீ கிடங்கின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் தொழிலாளா்கள் கிடங்கை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனா்.
இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் படப்பை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த படப்பை தீயணைப்புத்துறையினா் பல மணி நேரம் போராடி கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.
கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பழைய பிளாஸ்டிக் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

ஒசூா் அருகே பழைய பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


