அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை

திருவாடானை அருகே சனிக்கிழமை உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
விசாரணை.
Updated On :28 பிப்ரவரி 2026, 10:05 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே சனிக்கிழமை உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரூா் வயல் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மூதாட்டியின் உடல் அருகே துணிகள், வீட்டுச் சாவி, கைப்பேசியுடன் இருந்த மூதாட்டியின் பையை போலீஸாா் கைப்பற்றினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த போது, மூதாட்டி திருவாடானை அருகேயுள்ள ஆதியாகுடி பகுதியைச் சோ்ந்த பாக்கியம் மனைவி தனம் (60) என்பது தெரியவந்தது. மூதாட்டி இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.