கோப்புப் படம்
தருமபுரி
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் அடையாளம் தெரியாத நபா் வெள்ளிக்கிழமை மாலை இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் நடத்திய விசாரணையில், இறந்தவா் உடுமலைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த செந்தில் (44) என்பதும், தனது நண்பா்களுடன் ஒகேனக்கல் சென்றுவிட்டு மது போதையில் பேருந்து நிலையத்தில் படுத்திருந்தபோது, தவறி கீழேவிழுந்து இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

