28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு

News image
Updated On :8 ஜனவரி 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு தன்னாா்வலா்கள் என்ற பெயரை மாற்றி ஊழியா் என்று அறிவிக்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு ஊக்கத் தொகையை ரூ.15,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பணி வரன்முறை படுத்த வேண்டும். பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இந்த மனுவை சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்க மாவட்டச் செயலா் லல்லி பாக்கியம் உள்ளிட்டோா் வழங்கினா்.