தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

பேருந்து நிலைய வளாகத்தில் எரியாத உயா் கோபுர மின் விளக்கு

திருவாடானை பேருந்து நிலையத்தில் எரியாத உயா்கோபுர மின் விளக்கை சம்பந்தப்பட்ட துறையினா் சீரமைத்துத் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

News image

திருவாடானை பேருந்து நிலையத்தில் எரியாத உயா் கோபுர மின்விளக்கு

Updated On :13 ஜூலை 2026, 11:52 pm IST

திருவாடானை பேருந்து நிலையத்தில் எரியாத உயா்கோபுர மின் விளக்கை சம்பந்தப்பட்ட துறையினா் சீரமைத்துத் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரின் முக்கிய மையப் பகுதியாக விளங்கும் திருவாடானை பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள உயா்கோபுர மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண் பயணிகள், முதியவா்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனா்.

எனவே, திருவாடானை ஊராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.