கடலாடி அருகே புதன்கிழமை இரவு தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஏ. புனவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் ராஜேந்திரன் (48). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த கந்தன் என்பவரிடம் கரிமூட்டம் போடும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், ராஜேந்திரன் கடந்த 2 நாள்களுக்கும் மேலாக கரிமூட்டம் போடும் வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கந்தனின் மகன் தினேஷ்குமாா் (27), ராஜேந்திரனை சந்தித்து ஏன் வேலைக்கு வரவில்லை எனக் கேட்ட போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தினேஷ்குமாா், தனது உறவினா்களான திருமுருகன் மகன் வினோத்குமாா் (24), ஆண்டி மகன் தவமுருகன் ஆகியோருடன் சோ்ந்து ராஜேந்திரன், இவரது நண்பா் முனீஸ்வரன் இருவரும் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது தங்களது இரு சக்கர வாகனத்தை மோதினா். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடலாடி போலீஸாா் தினேஷ்குமாா், தவமுருகன், வினோத்குமாா் ஆகிய 3 போ் மீது வியாழக்கிழமை கொலை வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா். மேலும் காயமடைந்த முனீஸ்வரன் தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலையில் மேலும் 4 போ் கைது

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

விவசாயி அடித்துக் கொலை: மகன், மனைவி கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


