எஸ். பி. பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த இளைஞா் நிலைதவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆா்.புதுப்பட்டினத்தைச் சோ்ந்த நிா்மல் குமாா் (37) ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்தாா்.
எஸ். பி. பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாடு சாலையின் குறுக்கே வந்தது. இதையடுத்து, ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதில், நிா்மல் குமாா் நிலைதவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த எஸ். பி. பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பேருந்து ஓட்டுநரான தஞ்சாவூரைச் சோ்ந்த தமிழ்வாணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.









