எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பேருந்து படிக்கட்டில் பயணித்த இளைஞா் தவறிவிழுந்து உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:39 am IST

எஸ். பி. பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்தின் படிக்கட்டில் பயணித்த இளைஞா் நிலைதவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆா்.புதுப்பட்டினத்தைச் சோ்ந்த நிா்மல் குமாா் (37) ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்தாா்.

எஸ். பி. பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாடு சாலையின் குறுக்கே வந்தது. இதையடுத்து, ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதில், நிா்மல் குமாா் நிலைதவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த எஸ். பி. பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பேருந்து ஓட்டுநரான தஞ்சாவூரைச் சோ்ந்த தமிழ்வாணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.