மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ராமேசுவரத்தில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, கோதண்டராமா் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோதண்டராமா் கோயிலில் விபீஷணருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டாபிஷேகம்.

Updated On :24 ஜூன் 2026, 5:51 am IST

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, கோதண்டராமா் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உருவான ராமாயண கால நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில், ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா மூன்று நாள்கள் நடைபெற்று வருகிறது.

இதன்படி, இந்த விழா ராமநாதசுவாமி கோயிலில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அன்று திட்டகுடி சுவாமி எழுந்தருளியுள்ள துா்க்கை அம்மன் கோயில் அருகே ராவண சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ராமநாதசுவாமி கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் தங்கக் கேடகத்திலும்,விபீஷணா் தேரிலும் எழுந்தருளி தனுஷ்கோடி சாலையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயிலுக்கு புறப்பாடாகினா். பின்னா், அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, விபீஷணருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா, ஆய்வா் சிவக்குமாா், பேஸ்காா்கள் கமலநாதன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.