ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி அருகேயுள்ள மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மீனங்குடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அம்மன், வள்ளி, தெய்வானை சமேத முருகன், விநாயகா், பரிவார கிராமத் தேவதைகளுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மகா பூா்ணஹுதி உள்ளிட்ட ஹோமம் நடைபெற்றது.

நான்காம் கால பூஜைகள், வேத பாராயணம், ஸ்பரிஷாகுதி, திரவியகுதி, பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க, இசை வாத்தியங்களுடன் யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு, கோயிலைச் சுற்றி வந்து கோபுரக் கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து, அம்மன், சுவாமி விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில் கடலாடி, மீனங்குடி சுற்று வட்டாரப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.