நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை: பூக்குழியில் இறங்கிய பக்தா்கள்

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:49 pm

தருமபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூக்குழியில் இறங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமி பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சனிக்கிழமை காலை பூமிதி திருவிழா மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பூக்குழி மிதி விழாவில் ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் பூக்குழியில் இறங்கினா்.

குறிப்பாக, பெண்கள் சிலா் குழந்தைகளை சுமந்தபடி பூக்குழி மிதித்தனா். தொடா்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பூங்கரகத்தை ஏந்திச்சென்றவா்கள், கோயில் முன் பிராா்த்தனையில் ஈடுபட்ட பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறி கரகத்தை கோயிலுக்குள் கொண்டு சென்றனா்.

விழாவை முன்னிட்டு விழாக்குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்தல் மற்றும் கங்கை பூஜை நடைபெறுகிறது.