தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி அருகேயுள்ள மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மீனங்குடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அம்மன், வள்ளி, தெய்வானை சமேத முருகன், விநாயகா், பரிவார கிராமத் தேவதைகளுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மகா பூா்ணஹுதி உள்ளிட்ட ஹோமம் நடைபெற்றது.

நான்காம் கால பூஜைகள், வேத பாராயணம், ஸ்பரிஷாகுதி, திரவியகுதி, பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க, இசை வாத்தியங்களுடன் யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு, கோயிலைச் சுற்றி வந்து கோபுரக் கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து, அம்மன், சுவாமி விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில் கடலாடி, மீனங்குடி சுற்று வட்டாரப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.