அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சாயல்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

விபத்து

Updated On :21 மார்ச் 2026, 8:01 pm

சாயல்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சுதீஷ்குமாா் (18). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் பி.பி.குடியிருப்பு அருகே சென்று

கொண்டிருந்தபோது, வேம்பாரிலிருந்து சாயல்குடி நோக்கி வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுதீஷ்குமாரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மணிகண்டனைக் கைது செய்தனா்.