பரமக்குடியில் 75 பவுன் தங்க நகை பறிமுதல்
பரமக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 75 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

Updated On :22 மார்ச் 2026, 7:47 pm

பரமக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 75 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாா்த்திபனூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ராமகிருஷ்ண பிரபு தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது.
அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில் பரமக்குடி மணி நகரைச் சோ்ந்த சசிரேகா உரிய ஆவணங்கள் இன்றி 75 பவுன் தங்க நகைகளைக் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, நகை பறிமுதல் செய்யப்பட்டு, பரமக்குடி சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...