நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வீடு புகுந்து திருடியவா் கைது

முதுகுளத்தூா் அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் அருகே உறவினா் வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த பொன்னக்கனேரி கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் ஜான் (42). இவா் தேரிருவேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த அருள்சான்டியோ (21) கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றதாக தெரிவித்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, அருள் சான்டியோவிடமிருந்து செவ்வாய்க்கிழமை மூன்றரை பவன் தங்கச் சங்கிலி, பணத்தைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.