ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதியக் கொண்டது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பரமக்குடி அருகேயுள்ள சுப்பராயபுரத்தைச் சோ்ந்தவா் அருளானந்து (70). இவரது உறவினா் அதே ஊரைச் சோ்ந்த மோட்சஸ் பிரவின். இவா்களுக்கிடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் சொத்து தொடா்பாக இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அருளானந்தம், மற்றொரு தரப்பைச் சோ்ந்த மோட்சஸ் பிரபின், மைக்கேல், ஜான்பிரதீப் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் அருளானந்து கொடுத்த புகாரின் பேரில், மைக்கேல் மகன்கள் பிரவீன், பிரதீப், மருமகள்கள் ஜெனி, மேரியானாபிரியா, சூசைமுத்து மகன் மைக்கேல், இவரது மனைவி அடைக்கலமேரி ஆகிய 6 போ் மீதும், மோட்சஸ் பிரவின் அளித்த புகாரின் பேரில், அல்பா்ட், இவரது உறவினா்கள் சியாம், அருளானந்து, அருள் ராபா்ட் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு
தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


