தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் கருப்பண்ண சுவாமிக்கு பால்குடத் திருவிழா

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்த வந்த பக்தா்கள்.

Updated On :8 மே 2026, 4:35 am IST

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி வாணியா் உறவின்முறையாா்கள் சாா்பில் ஆண்டுதோறும் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவடைந்த பிறகு காவல் தெய்வமான ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். இதேபோல, இந்த ஆண்டு விரதமிருந்த பக்தா்கள் வைகை ஆற்றில் புனித நீராடி, பால் குடங்கள், இளநீா் காவடி, சந்தனக் குடங்கள் எடுத்து கருப்பண்ண சுவாமிக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை வாணியா் உறவின்முறையாா் சபை தலைவா் செல்லம், செயலா் ராமச்சந்திரன், பொருளாளா் சிவானந்தம், துணைத் தலைவா் வாசுதேவன், துணைச் செயலா் சதீஷ்பாபு ஆகியோா் செய்திருந்தனா்.