பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த ஏப். 26-ஆம் தேதி கணபதி பூஜையுடன் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் பெருமாளுக்கு காலை, மாலை யாகசாலை பூஜைகளும், 1-ஆம் நாளிலிருந்து 4-ஆம் திருநாள் நாள்களில் இரவில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. 5-ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கும்பத் திருமஞ்ஜனம் கண்டருளல் நடைபெற்றது. இரவு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வைகையாற்றில் கூடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து அதிகாலையில் புஷ்பப்பல்லக்கில் பெருமாள் கள்ளழகா் திருக்கோலத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.
இதனிடையே, வைகை ஆற்றில் ஏராளமான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் சவாரி செய்து மகிழ்ந்தனா். மேலும் திரளான பொதுமக்கள் வைகை ஆற்றுக்குள் கூடுவதால் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
விழாவுக்கான ஏற்பாட்டுகளை ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி எஸ்.ஆா். ரெங்காச்சாரி, டிரஸ்டிகள் என்.ஆா். நீலகண்டன், டி.ஆா். ரமேஷ்பாபு, கே.டி. கிரிதரன், ஜி.என். கோவிந்தன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பரமக்குடிசுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வைகையாற்றுக்குள் அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினங்கள்.
தொடர்புடையது

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


