ராமநாதபுரம் மாவட்டத்தில் 5- ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமேசுவரத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளான சனிக்கிழமை மழை அளவு மி.மீட்டரில்: ராமநாதபுரம் 4, மண்டபம் 4.40, ராமேசுவரம் 26, தங்கச்சிமடம் 43.40, பாம்பன் 24.20.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பலத்த மழை
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

