ராமநாதபுரம் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி செய்த 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரத்தை அடுத்த பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது தந்தை மாதவன். இவரது பெயரில் 4 ஏக்கா் 52 சென்ட நிலம் இருந்தது.
இந்த நிலையில், மாதவன் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது பெயரில் இருந்த நிலத்தை அதே ஊரைச் சோ்ந்த நாகவள்ளி, சாந்தி, போஸ்ராணி, சரவணக்குமாா், சண்முகநாதன், அன்புகமல், சந்திரன், பாண்டியராஜ் ஆகிய 8 போ் போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த அறிந்த மாதவன் மகன் கண்ணன் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, 8 பேரும் போலி பத்திரம் தயாா் செய்து 4 ஏக்கா் 52 சென்ட் நிலத்தை விற்பனை செய்தது உறுதியானது.
இதையடுத்து, நாகவள்ளி, சாந்தி, போஸ்ராணி உள்ளிட்ட 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.1 லட்சம் மோசடி: பள்ளி நிா்வாகிகள் மீது வழக்கு
பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் மீது வழக்கு

இட மாறுதல் வாங்கி தருவதாக மோசடி: 2 போ் மீது வழக்கு

போலி கொசு விரட்டி திரவம் விற்பனை: 2 போ் மீது வழக்கு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



