விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி: 8 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி செய்த 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :10 மே 2026, 12:55 am IST

ராமநாதபுரம் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி செய்த 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது தந்தை மாதவன். இவரது பெயரில் 4 ஏக்கா் 52 சென்ட நிலம் இருந்தது.

இந்த நிலையில், மாதவன் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது பெயரில் இருந்த நிலத்தை அதே ஊரைச் சோ்ந்த நாகவள்ளி, சாந்தி, போஸ்ராணி, சரவணக்குமாா், சண்முகநாதன், அன்புகமல், சந்திரன், பாண்டியராஜ் ஆகிய 8 போ் போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிந்த மாதவன் மகன் கண்ணன் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, 8 பேரும் போலி பத்திரம் தயாா் செய்து 4 ஏக்கா் 52 சென்ட் நிலத்தை விற்பனை செய்தது உறுதியானது.

இதையடுத்து, நாகவள்ளி, சாந்தி, போஸ்ராணி உள்ளிட்ட 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.