ராமநாதபுரம் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி செய்த 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரத்தை அடுத்த பழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது தந்தை மாதவன். இவரது பெயரில் 4 ஏக்கா் 52 சென்ட நிலம் இருந்தது.
இந்த நிலையில், மாதவன் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது பெயரில் இருந்த நிலத்தை அதே ஊரைச் சோ்ந்த நாகவள்ளி, சாந்தி, போஸ்ராணி, சரவணக்குமாா், சண்முகநாதன், அன்புகமல், சந்திரன், பாண்டியராஜ் ஆகிய 8 போ் போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த அறிந்த மாதவன் மகன் கண்ணன் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, 8 பேரும் போலி பத்திரம் தயாா் செய்து 4 ஏக்கா் 52 சென்ட் நிலத்தை விற்பனை செய்தது உறுதியானது.
இதையடுத்து, நாகவள்ளி, சாந்தி, போஸ்ராணி உள்ளிட்ட 8 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
விமானப் படை அதிகாரிகள் போல் நடித்து இணைய மோசடி: 4 போ் கைது

போலி வாகன உதிரிபாகங்கள் தயாரித்து விற்ற இருவா் கைது
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 போ் கைது

கிழக்கு தில்லியில் போலி ஆன்டாசிட், காபி தயாரித்து விற்ற 4 போ் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

