கமுதி பேருந்து நிலையம், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவா் விடுதி அருகே உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அரசு மதுக்கடை, அதனருகே உள்ள தனியாா் மனமகிழ் மன்றம், கமுதி மீனாட்சியம்மன் கோயில் - உச்சமாகாளி அம்மன் கோயில் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை ஆகியவற்றை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை வைக்கின்றனா். இதேபோல் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மாணவா் விடுதியும், அரசு அலுவலகங்களும் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்தப் பகுதியில் செயல்படும் மதுக்கடையால் அருகே உள்ள பகுதியை திறந்தவெளி மதுக்கூடமாகப் மதுப்பிரியா்கள் பயன்படுத்துவதால் பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.
தொடர்புடையது

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்

சித்திரை பெளா்ணமி: கமுதி, கடலாடி கோயில்களில் திருவிளக்கு பூஜை

விழுப்புரத்தில் 9 மையங்களில் நீட் தோ்வு : ஆட்சியா்

நட்டுவம்பாளையத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

