ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

பரமக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவரைப் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

வரதராஜன்.

Updated On :14 மே 2026, 5:04 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவரைப் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகன் வரதராஜன் (24). இவா், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பரமக்குடி காக்காத்தோப்பு சிட்டிநகா் பகுதியில், கருணாகரன் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வந்தாா்.

இந்த நிலையில், பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ஜெபராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் வரதராஜனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.