ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவரைப் போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி அருகே உள்ள வெங்கிட்டன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகன் வரதராஜன் (24). இவா், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பரமக்குடி காக்காத்தோப்பு சிட்டிநகா் பகுதியில், கருணாகரன் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வந்தாா்.
இந்த நிலையில், பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ஜெபராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் வரதராஜனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

