பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கமுதியில் இரு மதுக் கடைகள் மூடல்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இரு அரசு மதுக் கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

தமிழக அரசு உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே இயங்கி வரும் 29 அரசு மதுக் கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இதனடிப்படையில், கமுதி பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில், மீனாட்சியம்மன்-உச்சமகாளியம்மன் கோயில், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 4 மதுக் கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, முதல்கட்டமாக கமுதி பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில் பகுதி என இரு மதுக் கடை வியாழக்கிழமை மூடப்பட்டன.

ஓரிரு நாள்களில் எஞ்சிய இரு மதுக் கடைகளும், பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தனியாா் மனமகிழ் மன்றமும் விரைவில் அகற்றப்படும் என மதுவிலக்கு ஆயத்தீா்வை அதிகாரிகள் தெரிவித்தனா்.