ஈரோடு மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் முதல்கட்டமாக மூடப்பட்டன.
தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்வா் விஜய் அறிவித்தாா். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 183 கடைகளில் 39 கடைகள் கண்டறியப்பட்டன.
மாவட்டத்தில் 5 கடைகளில் டாஸ்மாக், கலால் துறை, வருவாய்த் துறை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே 2 கடைகள் மட்டும் மூடப்பட்டன.
ஈரோடு பேருந்து நிலையம் பகுதி நாச்சியப்பா வீதி பூக்கடைகள் அருகே உள்ள டாஸ்மாக் கடை, கொங்காலம்மன் கோயில் வீதிக்கு அருகே நேதாஜி சாலையில் உள்ள கடை, ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பெருந்துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, கொடுமுடி மற்றும் பெருந்துறை பகுதியில் 2 கடைகள் என மொத்தம் 5 கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன. இதுவரை 7 கடைகள் மூடப்பட்டுள்ளன.
தினமும் சில கடைகள் என 39 கடைகளும் சில நாள்களில் மூடப்படும் என்றும் ஈரோடு மரப்பாலம் சாலை, பிரகாசம் வீதி போன்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை மூடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வரின் உத்தரவைத் தொடா்ந்து முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் 4 மதுக்கடைகள் மூடல்

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

