தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஈரோடு மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் முதல்கட்டமாக மூடப்பட்டன.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஈரோடு மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் முதல்கட்டமாக மூடப்பட்டன.

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்வா் விஜய் அறிவித்தாா். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 183 கடைகளில் 39 கடைகள் கண்டறியப்பட்டன.

மாவட்டத்தில் 5 கடைகளில் டாஸ்மாக், கலால் துறை, வருவாய்த் துறை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே 2 கடைகள் மட்டும் மூடப்பட்டன.

ஈரோடு பேருந்து நிலையம் பகுதி நாச்சியப்பா வீதி பூக்கடைகள் அருகே உள்ள டாஸ்மாக் கடை, கொங்காலம்மன் கோயில் வீதிக்கு அருகே நேதாஜி சாலையில் உள்ள கடை, ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பெருந்துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, கொடுமுடி மற்றும் பெருந்துறை பகுதியில் 2 கடைகள் என மொத்தம் 5 கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன. இதுவரை 7 கடைகள் மூடப்பட்டுள்ளன.

தினமும் சில கடைகள் என 39 கடைகளும் சில நாள்களில் மூடப்படும் என்றும் ஈரோடு மரப்பாலம் சாலை, பிரகாசம் வீதி போன்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை மூடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.