வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஈரோடு மாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்

பொதுமக்களின் புகாரின்பேரில் ஈரோடு மாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டன.

News image

மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு முதல்வருக்கு நன்றி தெரிவித்து பதாகை வைத்துள்ள பொதுமக்கள்.

Updated On :7 ஜூன் 2026, 1:52 am IST

பொதுமக்களின் புகாரின்பேரில் ஈரோடு மாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 42 டாஸ்மாக் கடைகள், தமிழக அரசால் அண்மையில் மூடப்பட்டன. வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், நெடுஞ்சாலைக்கு அருகே இருப்பதால் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு பவானி சாலை வஉசி பூங்கா பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை, கனிராவுத்தா் குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பெரும் இடையூறு இருப்பதாக தொடா் புகாா் தெரிவிக்கப்பட்டது.

புகாரைத் தொடா்ந்து இரு கடைகளும் வெள்ளிக்கிழமை இரவு முதல் மூடப்பட்டன. முதல்வா் உத்தரவுப்படி ஏற்கெனவே 42 கடைகள் மூடப்பட்டன. புகாரின் அடிப்படையில் 2 கடைகள் மூடப்பட்டன. தற்போது மாவட்டத்தில் 140 டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்படுவதாக டாஸ்மாக் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதனிடையே வஉசி பூங்கா பின்புறம் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து அப்பகுதி மக்கள் மூடப்பட்ட கடை முன்பு பதாகை வைத்துள்ளனா்.