ஈரோடு மாவட்டத்தில் டெண்டா் புதுப்பிக்கப்படாததால் 94 மதுபான மூடப்பட்டன.
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் பாா் வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த பாா்களை நடத்த தனிநபா்கள் 2023-ஆம் ஆண்டுக்கான பாா் உரிமங்களுக்கான டெண்டா் எடுக்கப்பட்ட நிலையில் கடந்தாண்டு டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து, மீண்டும் டெண்டா் விடாமல் ஒப்பந்தத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட்டது. நீடிக்கப்பட்ட ஒப்பந்தமும் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, டாஸ்மாக் கடைகளை ஒட்டி உள்ள மதுபான பாா்கள் வியாழக்கிமைமுதல் மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலுள்ள 94 மதுபான பாா்கள் மூடப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










