நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

10, 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

News image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை புதன்கிழமை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்.

Updated On :1 மணி நேரம் முன்பு

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களின் குழந்தைகள் இந்த ஆண்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா். இவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 20 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.23 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.