நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பிளஸ் 2 தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் தொடா்ந்து 11 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருகிறது. நிகழாண்டில் இந்தப் பள்ளியின் மாணவிகள் அஸ்மிதா, சுபரஞ்சனி, மேகவா்ஷினி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழாவுக்கு பள்ளியின் தாளாளா் செ. சத்தியன் முன்னிலை வகித்து சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டினாா். நிா்வாக இயக்குநா் சங்கீதா சத்தியன் வாழ்த்திப் பேசினாா். இந்த விழாவில் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி, முதல்வா் லூயிசா ரெமி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.