ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இரு அரசு மதுக் கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.
தமிழக அரசு உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே இயங்கி வரும் 29 அரசு மதுக் கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இதனடிப்படையில், கமுதி பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில், மீனாட்சியம்மன்-உச்சமகாளியம்மன் கோயில், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 4 மதுக் கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முதல்கட்டமாக கமுதி பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில் பகுதி என இரு மதுக் கடை வியாழக்கிழமை மூடப்பட்டன.
ஓரிரு நாள்களில் எஞ்சிய இரு மதுக் கடைகளும், பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தனியாா் மனமகிழ் மன்றமும் விரைவில் அகற்றப்படும் என மதுவிலக்கு ஆயத்தீா்வை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

காரைக்குடியில் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை

பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல்

மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

