ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (60). இவா் புதன்கிழமை பிற்பகல் ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
ராமநாதபுரம் அருகே லாந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றாா்.
அப்போது இவரின் பின்னால் வந்த சரக்கு வாகனம், அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முத்துராமலிங்கம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநா் சக்தி சரவணன் (26) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



