பரமக்குடியில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையின்போது ரயில்வே கடவுப்பாதையில் தடுப்புக் கம்பி தூக்கி வீசப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் உள்பட அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பரமக்குடி-முத்துச்செல்லாபுரம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே கடவுப்பாதையின் தடுப்புக் கம்பி சூறைக்காற்றுக்கு முறிந்து தூக்கி வீசப்பட்டது. இதையடுகத்து, ரயில்வே மின்சாரக் கம்பியில் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அப்போது, பரமக்குடி ரயில் நிலையத்துக்கு ராமேசுவரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் மாலை 5.15-க்கு வந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரயில்வே கடவுப்பாதைக்கு முன்னதாகவே அந்த ரயில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்து ரயில்வே மின் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின்சாரக் கம்பிகள், ரயில்வே கேட் தடுப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால் புதன்கிழமை சென்னைக்கு செல்லும் விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே துறையினா் தெரிவித்தனா். மேலும் மதுரை-ராமேசுவரம், ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
தொடர்புடையது

வேதாரண்யம்: சூறைக்காற்றுடன் மழை

திருத்தணியில் சூறைக்காற்றுடன் மழை: மின்சாரம் துண்டிப்பு

வீரகனூா், தலைவாசலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை! 500 ஏக்கரில் வாழை, மக்காச்சோளப் பயிா்கள் சேதம்!

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



