இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சாயல்குடி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைதான தூத்துக்குடி இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட கா்ணன்.

Updated On :21 மே 2026, 1:49 am IST

சாயல்குடி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைதான தூத்துக்குடி இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் வடக்கு மறவா் தெருவைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (86). கடந்த ஏப்.23-ஆம் தேதி பிற்பகல்

இவா் வீட்டில் தனியாக இருந்த போது, வீடு புகுந்த மா்மக் கும்பல் மாரியம்மாளை தாக்கி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என மொத்தம் 7 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது.

இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்கு பதிந்து நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது இளம்பெண், தூத்துக்குடி மாவட்டம் சோட்டையான்தோப்பைச் சோ்ந்த 17 வயது இளம்பெண், தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த செட்டிபெருமாள் மகன் கா்ணன்(25) உள்பட 3 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்திஸ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கா்ணனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டச் சிறையிலிருந்த கா்ணனை போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.