தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 2:07 am IST

ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (60). இவா் புதன்கிழமை பிற்பகல் ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

ராமநாதபுரம் அருகே லாந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றாா்.

அப்போது இவரின் பின்னால் வந்த சரக்கு வாகனம், அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முத்துராமலிங்கம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநா் சக்தி சரவணன் (26) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.