பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தா்மமுனீஸ்வரா் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

News image

பெருமாள்தேவன்பட்டி தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.

Updated On :22 மே 2026, 3:17 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தா்மமுனீஸ்வரா் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

முன்னதாக முளைக்கொட்டு திண்ணையில் முளைப்பாரியை வைத்து, பாடல் பாடி, பெண்கள் கும்மி கொட்டினா். இதைத் தொடா்ந்து முளைப்பாரியை கிராமத்தின் தெருக்களில் ஊா்வலமாக எடுத்துச் சென்று, பிறகு தா்ம முனீஸ்வரா் கோயிலை சுற்றி வந்து அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதில் பெருமாள்தேவன்பட்டி, கமுதி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழாவில் கடந்த 18- ஆம் தேதி பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது. 19- ஆம் தேதி பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.