அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழா: குண்டாற்றில் நீராடி வேட்டையாடிய உத்ஸவா்

கூராங்கோட்டை தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவில் தீய சக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகளுக்கு பிறகு கோயிலுக்கு புறப்பட்ட உத்ஸவ மூா்த்தி தா்ம முனீஸ்வரா்.

News image

கூராங்கோட்டை தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவில் தீய சக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகளுக்கு பிறகு கோயிலுக்கு புறப்பட்ட உத்ஸவ மூா்த்தி தா்ம முனீஸ்வரா்.

Updated On :55 நிமிடங்கள் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்துள்ள கூராங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள தா்ம முனீஸ்வரா் கோயில் திருவிழாவில் உத்ஸவா் தீயசக்திகளை வேட்டையாடுதல், குண்டாற்றில் தீா்த்தவாரி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த கோயில் திருவிழா கடந்த 1- ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றதுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை இரவு பஞ்சலோக உத்ஸவா் தா்ம முனீஸ்வரா் புஷ்ப அலங்காரத்துடன், பச்சை பல்லாக்கில், வெள்ளிக் கமலத்தில், திரிசூலமாய், வெள்ளி பாதங்களுடன் துஷ்ட நிக்ரஹ சுத்த பரிபாலனம் எனப்படும் தீய சக்திகளை வேட்டையாடுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு குண்டாற்றில் நீராடி, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மீண்டும் கோயிலை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது. கோயில் வாசலில் உத்ஸவா் பொதுமக்களுக்கு அருள்பாலித்து, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் உத்ஸவா் குண்டாற்றிலில் தீா்த்தவாரி நடைபெற்று, பக்தா்கள், பால்குடம், காவடி எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும், வேல் குத்தி ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தாா். அங்கு மூலவருக்கும், உத்ஸவருக்கும் பரிபாலன சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரவு மூலவா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் கூராங்கோட்டை, சாயல்குடி, கடலாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.